search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investigation Report"

    பேரிடர் ஒத்திகையின் போது கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான விவகாரம் தொடர்பாக மண்டல இணை இயக்குனர் கலா தயாரித்த அறிக்கை கலெக்டர் ஹரிஹரன் மூலமாக தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    பேரிடர் ஒத்திகையின் போது கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் கல்வித்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலா மாணவி பலியான கலைமகள் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். கல்லூரி சார்பில் அரசு தரப்பில் எந்த அனுமதி பெறாமலும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்காமலும் தன்னிச்சையாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தது தெரிய வந்தது.

    மண்டல இணை இயக்குனர் கலா தயாரித்த அறிக்கை கலெக்டர் ஹரிஹரன் மூலமாக தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தலைமை செயலாளர் மூலம் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்.

    கலைமகள் கல்லூரி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாணவி பலியானது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #CoimbatoreStudent #Logeshwari #MockTrainer #MockDrill #DisasterDrill


    ×