search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interim injunction"

    • தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது.
    • நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்த ரவிட்டார்.

    மதுரை

    கேரள மாநிலம் கொல் லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச்செயலாளர் நாக ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கேரளா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் வாகனங் களை இயக்குகிறோம். கேர ளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள் ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்தி றன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இத னால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள் சாலைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிக ளுக்குத் தேவையான கிரா வல் ஜல்லிகற்கள், எம். சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழ்நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தையே சார்ந்துள் ளோம். தமிழ்நாட் டின் உத வியின்றி கேரளாவின் உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.

    ஜிஎஸ்டி, நடைசீட்டு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனு மதியுடன் தான் தமிழ்நாட்டில் இருந்து கனிமங்கள் கேரளா விற்கு கொண்டு செல்லப்ப டுகிறது. இந்நிலையில் தென் காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை இன்ஸ்பெக்டர் மற்றும் கனிமவன அதிகாரி கள் உள்ளிட்டோர் 10 சக்க ரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனை கொண்டு செல்ல மறுக்கின்ற னர்.

    கன்னியாகுமரி மாவட் டம் புளியரை களியக்கா விளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலை யார் செக்போஸ்ட்டுகளில் இந்த வாகனங்களுக்கு அனு மதி மறுக்கப்படுகிறது. புளியரை செக் போஸ்ட்டை மட்டும் நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்லாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதித்துள்ள னர்.

    எனவே தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங் களில் இருந்து 10 சக்கரங்க ளுக்கு மேற்பட்ட வாகனங்க ளில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்கள் கொண்டு செல்ல அனு மதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தமிழக அர சுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது

    இதனை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவ காசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, தென் காசி புளியரை பகுதியில் 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற தமிழக அரசின் உத்த ரவிற்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தர விட்ட நீதிபதி, வழக்கு விசா ரணையை நான்கு வாரங்க ளுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    ×