search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspection of Mullai periyar"

    • தமிழக பொறியாளர் குழுவினர் சுரங்கப்பாதை வழியாக சென்று பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தனர்.
    • தமிழக நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்ய கேரள அரசு எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்க ப்படும் சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணி மேற்ெகா ள்ள முடிவு செய்யப்பட்டது. ஷட்டர் பகுதி தேக்கடி வனத்துறை சோதனை ச்சாவடி அருகே உள்ளது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக குமுளி மலைப்பா தையை ஒட்டியுள்ள போர்பே அணையில் இருந்து வெளியேறும். அந்த தண்ணீர் ராட்சத குழாய் மூலம் திறக்கப்பட்டு மின்உற்பத்தி செய்தபின் லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் கலக்கும்.

    தற்போது அணையிலி ருந்து 100 கனஅடிநீர் மட்டுமே திறந்துவிடப்படு கிறது. இந்தநிலையில் தமிழக பொறியாளர் குழுவினர் சுரங்கப்பாதை வழியாக சென்று பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வ தற்காக ஆய்வு செய்தனர். பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இ ர்வின், உதவிபொறியா ளர்கள் ராஜகோபால், நவீன்குமார், அபிநயா, வாசுதேவன், மின்வாரிய உதவிசெயற்பொறி யாளர்கள் கருணாகரன், ரெஜி, உதவிபொறியாளர் தினேஷ் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர். முல்லை பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்ய கேரள அரசு எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகைஅணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.18 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×