என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insecticide spray"

    • விவசாயிகளுக்கு பயிற்சி
    • வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா வுக்கு உட்பட்ட ஊசூர் மண்டல உள்வட்ட கிராம பகுதியில் உள்ள விவசா யிகள் நிலங்களில் நெல் 5 உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்துள்ளனர்.

    பயிர்களில் பூச் சிகள் அதிக அளவில் தாக்கி பாதிப்பு ஏற்படுகிறது. பயிர்களைத் தாக்கும் பூச்கொண்டு மருந்து தெளிப் பது வழக்கம்.

    பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க ஆட்கள் கிடைப்பது இல்லை.

    இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆராய்ச்சி நிலையத்தினர் டிரோன் கருவி மூலம் நவீன முறையில் பூச்சி மருந்து மற்றும் உரம்கலந்து தெளிக்க விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வ வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலை வர் திருமுருகன் உத்தர வின்படி, ஊசூர் பகுதியில் பெருமாள் என்பவரது நிலத்தில் வேளாண்மை துறை துணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், உதவி இயக்கு னர் முருகன்,வேளாண்மை அலுவலர் வேல்முருகன், வட்டார விதை உதவி அலுவலர் இளவரசன், உதவி வேளாண்மை அலுவலர் கிஷோர் வர்ஷன் மற்றும் கோயம்புத்தூர், விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி யாளர்கள் சாந்தி, அரி, கார்த்திகேயன், செந் தில் வேல், உள்ளிட்டோர் பூச்சி மருந்து மற்றும் உரம் கலந்து டிரோன் மூலம் தெளிக்கும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

    ×