search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indo Pakistan International Border"

    சர்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF
    புதுடெல்லி:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒருவர் நேற்று மாலை நுழைய முயன்றுள்ளார். இதனைக் கவனித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.

    சிந்தி மொழி பேசிய அந்த நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்ச் மாவட்டம் பலசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடம் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.



    இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. கடந்த 6ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானியர், எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF

    ×