என் மலர்
நீங்கள் தேடியது "Indian kabaddi Team"
- இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின.
- பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா சீன தைபே அணியை வீழ்த்தியது.
டாக்கா:
11 அணிகள் இடையிலான 2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், 'பி' பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 33 -21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் சீன தைபே அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 35-28 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதில் இந்தியா 23-24 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 50-21 எனவும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 44-28 எனவும் வீழ்த்தியிருந்தது. இந்தியா அடுத்த போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது.






