search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase in the yield of pumpkins"

    • கடந்த மாதம் பெய்த மழையால் விளை ச்சல் அமோகமாக உள்ளது.
    • விசேஷ தினங்களோ, கோவில் திருவிழாக்கலோ அதிகம் இல்லாத நிலையில் ரூ.8 க்கு விலை போனது பெரும் கவலை அளிக்கிறது.

    திண்டுக்கல்:

    நீர்ப்பூசணி என அழைக்கப்படும் வெள்ளை பூசணி சமையலுக்கும், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரங்களுக்காகவும் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளதால் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பூசணிக்காய் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

    கொடி இனத்தை சேர்ந்த பூசணிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள 2 வகை பூசணி காணப்படு கிறது. இந்த 2 வகை பூசணிக்காய்களிலும் உள்ள சதைப்பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படு த்தப்படுகின்றன.

    வெள்ளைப் பூசணி க்காயை பெரும்பாலும் திருஷ்டி கழிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டா சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்ச த்தும் வளமாக நிறைந்து ள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

    இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட வெள்ளை பூசணிக்காய்களை சாகுபடி செய்ய திண்டுக்கல் சுற்று வட்டார பகுதியான தாடிக்கொம்பு, பழைய காப்பிளியபட்டி, வி.புதூர், மறவபட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையால் விளை ச்சல் அமோகமாக உள்ளது.

    திண்டுக்கல் அடுத்த பழைய காப்பளிய ப்பட்டியில் இருந்து விளை விக்கப்பட்ட வெள்ளை பூசணி ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். கடந்த மாதங்க ளில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருந்ததால் ரூ. 15க்கு விற்கப்பட்டது. தற்போது அதிக விளைச்சல் உள்ளதால் வரத்து அதிகரி த்தது. மேலும் வெள்ளை பூசணியின் பயன்பாடு குறைவாக உள்ளதால் இன்று ரூ.8 க்கு விலை போனது. இது விவசாயிக ளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பழைய காப்பிளியப் பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரபு கூறுகையில்,

    1½ ஏக்கரில் பூசணி பயிரிட்டிருந்தேன். ரூ.40 ஆயிரம் செலவான நிலை யில் 5 டன் பூசணிக்காய் விளைச்சல் வந்தது. ஆனால் விசேஷ தினங்களோ, கோவில் திருவிழாக்கலோ அதிகம் இல்லாத நிலையில் ரூ.8 க்கு விலை போனது பெரும் கவலை அளிக்கிறது. குறைந்த பட்சம் ரூ.12 விலை போனால் மட்டுமே விவசாயிக்கு கட்டுபடியான விலை கிடைக்கும். இந்த விலை சரிவு விவசாயி களுக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.


    ×