என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in mango yield"

    • சந்தைகளில் ரூ.15 முதல் ரூ.17வரை மட்டுமே கிடைக்கிறது.
    • நல்ல ஒரு லாபமாக இருக்கும் என்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்காசோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளிவல் மேரக்காய் பயிட்டுள்ளனர்.

    தற்போது பெய்த மழை காரணமாக மேரக்காய் நல்ல விளைச்சலை எட்டியுள்ளது. மேரக்காய் விளைச்சலுக்கு அதிகபடியான தண்ணீர் தேவைப்படும். கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    தற்போதைய விளைச்சலுக்கு முந்தைய விளைச்சல் அறுவடையில் சமவெளிப்பகுதி சந்தைகளில் மேரக்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.25 முதல் ரூ.30 விலை கிடைத்த நிலையில் தற்போது மேரக்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதி சந்தைகளில் ரூ.15 முதல் ரூ.17வரை மட்டுமே கிடைக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேரக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. வண்டி வாடகை, பணியாட்கள் கூலி, முதலீடு ஆகியவைகளை ஈடுகட்ட இது பெரிய லாபம் இல்லை என்றாலும் சமநிலை விலையாக இருக்கிறது. இருப்பினும் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை கிடைத்தால் நல்ல ஒரு லாபமாக இருக்கும் என்றனர்.

    ×