என் மலர்
நீங்கள் தேடியது "Husband and wife die"
- ஒன்றாக தகனம் செய்தனர்
- 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 81),விவசாயி. இவரது மனைவி இந்திராணி (74), இவர்களுக்கு சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் விவசாயம் செய்து கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தன்னுடைய நிலத்துக்கு சென்று முனுசாமி விவசாய வேலையில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் முனுசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது மனைவி இந்திராணி மீளா துயரம் அடைந்தார்.
கணவர் உடல் மீது சாய்ந்து நீண்ட நேரமாக கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் கணவர் இறந்த தூக்கம் தாளாத அதிர்ச்சியில் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது மகன்கள், உறவினர்கள், கிராம மக்கள் உட்பட அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதனையடுத்து ஒரே நேரத்தில் உயிரிழந்த கணவன் மனைவி இருவரின் உடலையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இவர்களது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் ஒன்றாக வைத்து எரியூட்டப்பட்டது.
55 ஆண்டுகளாக இல்லற வாழ்வில் இனணந்து வாழ்ந்த தம்பதியர் இறப்பிலும் இணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.






