என் மலர்
நீங்கள் தேடியது "How Karunanidhi became Chief Minister"
- கருணாநிதி, மு.க.ஸ்டாலினால்தான் தி.மு.க. வளர்ந்தது என உதயநிதி நினைத்துக் கொண்டுள்ளார்.
- 1972-ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கி இந்த இயக்கத்தை வெற்றி இயக்கமாக மாற்றினார்.
திண்டுக்கல்:
ஒட்டன்சத்திரத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணா 1952-ல் தி.மு.க.வை ஆரம்பித்தபோது கடும் சோதனைகளுக்கு ஆளானார். காங்கிரசை எதிர்த்து 15 எம்.எல்.ஏ.க்களை வெற்றிபெற வைத்தார். 1957-ல் 50 எம்.எல்.ஏ.க்களை பெற முடிந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆண்ட காங்கிரசை எதிர்த்து 1967-ல் தேர்தல் வந்த போது பஞ்சம் தலைவிரித்தாடியது.
அண்ணாவுக்காக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆரின் கழுத்தில் மப்ளருடன் உள்ள போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. இதனால் அண்ணா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வந்த அதிகாரிகளிடம் முதலில் வெற்றிக்கு காரணமான எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்லுங்கள் என கூறினார். அந்த பெருந்தன்மை அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது.
அண்ணா மறைவுக்கு பின்பு நாவலர் நெடுஞ்செழியன் முதல்-அமைச்சராக வந்திருக்க வேண்டும். குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் பதவியை பிடித்தவர் கருணாநிதி. இந்த வரலாறு உதயநிதிக்கு தெரியாது. கருணாநிதி, மு.க.ஸ்டாலினால்தான் தி.மு.க. வளர்ந்தது என உதயநிதி நினைத்துக் கொண்டுள்ளார்.
கருணாநிதி முதல்வரான பிறகு 3 வருடங்களில் லஞ்சம் தலைவிரித்தாடியது. அதன் பிறகு 1972-ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கி இந்த இயக்கத்தை வெற்றி இயக்கமாக மாற்றினார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியைத் தொடர்ந்து குடிமராமத்து நாயகனாக போற்றப்பட்டார். ஆனால் தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் அ.தி.மு.க.வில் அறிவிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் கடந்த 29 மாதங்களில் ரூ.3 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியை திசை திருப்ப சனாதனத்தை கையில் எடுத்துள்ளனர்.
இந்துக்களை ஒழித்து விட்டு சிறுபான்மையினர் ஆதரவை பெற்று விடலாம் என தி.மு.க.வினர் கனவு காண்கின்றனர். அனைத்து மதத்தினருக்கும் உற்ற நண்பனாக விளங்குவது அ.தி.மு.க.தான். தற்போது டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி வரும் நிலையில் காவிரி நீரை பெற்றுத் தர முடியாத நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உள்ளார். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் முதல்வரிடம் காவிரி நீரை பெற முடியாத ஸ்டாலினால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க முடியவில்லை. விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






