என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "House burglary"
- 2 பீரோக்களை உடைத்து கைவரிசை.
- துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது துணிகரம்
வேலூர்:
வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 46).இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பரமேஸ்வரி. பரமேஸ்வரியின் தந்தை மேல் பாடியில் கடந்த வாரம் காலமானார்.
அவரது காரியம் இன்று நடைபெறுவதால் நேற்று காலை வீட்டை பூட்டி கொண்டு அனைவரும் மேல்பாடி சென்று இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் முன்பாக இருந்த மதில் சுவரின் மீது ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்தனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டனர். பீரோவில் இருந்த கவரிங் நகைகளை மட்டும் அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை சங்கரின் எதிர்த்து வீட்டை சேர்ந்தவர் பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்கருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்பாடியில் இருந்து இன்று காலை வீட்டிற்கு வந்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் முத்துக்குமார சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்