என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horse picking festival"

    • பிள்ளையார்நத்தம் ஊராட்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற முப்பிலி ஆண்டவர், கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது.
    • இங்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    நத்தம்:

    செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற முப்பிலி ஆண்டவர், கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது. பொதுமக்கள் வேண்டுதல் வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் கோவிலில் குதிரை செய்து வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இங்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா நடத்துவது என கிராம மக்கள் ஒன்றுகூடி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து களிமண்ணாலான கருப்பசாமி, முப்பிலி ஆண்டவர், குதிரை, காளை, நாய் உள்ளிட்ட சிலைகளை செய்து வந்தனர்.

    பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை கோவிலில் வைத்து குதிரைகளுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட குதிரைகளை தோளில் சுமந்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டனர். இங்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கிடாய் மற்றும் சேவல்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. இதில் கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, செந்துறை, பிள்ளையார்நத்தம்புதூர், குடகிபட்டி, மணக்காட்டூர், நத்தம் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×