search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home money robbery"

    வடபழனியில் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி குமரன் காலனி 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 51). ஆதம்பாக்கத்தில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.

    மகேஸ்வரி நேற்று மாலை தனது பயிற்சி வகுப்பில் வசூலான பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து பெற்ற பணம் என மொத்தமாக சேர்த்து ரூ.2 லட்சத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் கைப்பையை வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்த மகேஸ்வரி கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். வெளியே ஓடி வந்து பார்த்தபோது கைப்பை மட்டும் கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.2லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசில் மகேஸ்வரி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலுசாமி வழக்குப் பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    ×