search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HOME GRARD"

    • ஊர்க்காவல் படையில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தகவல்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படையினருக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 ஆண்கள் மற்றும் 3 பெண் பணியிடங்களை பூர்த்தி செய்யவதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது. இந்த இரு தினங்களிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்களாக இருக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும் தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.

    கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியன அசல் மற்றும் நகல்கள் ஒன்று எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும்.

    இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் உடல் தகுதிகள் காவல்துறையை போன்றது. ஆண்களில் பி.சி., எம்.பி.சி. போன்ற பிரிவினருக்கு 170 செ.மீ. உயரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 167 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

    மார்பளவு அனைவருக்கும் சாதாரணமாக 81 செ.மீ. விரிந்த நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களில் பி.சி., எம்.பி.சி. பிரிவினுருக்கு 159 செ.மீ. உயரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் தரப்படும்.

    பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஊர்க்காவல் படைக்கு மூன்று ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். தேர்வு நாளன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது. 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும்.

    அரசு பணியில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×