search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holi Festival Special Train Reservations"

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஹோலி பண்டிகையையொட்டி ரெயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை- நாகர்கோவில் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    ×