என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hoisting of the National Flag"

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
    • மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தூசி கே. மோகன் தலைமை வகித்தார்.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன், நகர செயலாளர் கு. வெங்கடேசன், நகர அவை தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 75-வது சுதந்திர தின தேசியக் கொடியை ஏற்றினார்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், பெண்களுக்கு சேலையும், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன், மகேந்திரன், குணசீலன், துரை, ஜாகிர் உசேன், கோவிந்தராஜ், சுரேஷ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×