என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hoarding of ration rice"

    • ரேஷன் அரிசி பதுக்கியதால் நடவடிக்கை
    • கோதுமையையும் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மாதலாம்பாடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் 2 சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மங்கலம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 2 சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரியை மங்கலம் போலீசார் ஒப்படைத்தனர்.

    பின்னர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கிலோ எடை உள்ள 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பாலீஷ் போட்டு பெங்களூருவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    மேலும் கோதுமையையும் கடத்தி வந்து மாவாக அரைத்து கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலை மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×