என் மலர்
நீங்கள் தேடியது "HIT THE PERSON WHO ASKED FOR THE LOAN"
- கடனை திருப்பிக்கேட்டவரை உருட்டு கட்டையால் தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 41 ) இவரிடம், ஆலங்குடி பகுதியில் வசிக்கும் அருள் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த பணத்தை நீண்ட நாட்களாக கொடுக்காததால், தர்மராஜ் கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அருள், அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தர்மராஜை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தர்மராஜை தாக்கிய 3 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.






