search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu munnani party"

    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடும் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கடலூர் நகர இந்து முன்னணி கட்சி ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பதில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இது இந்துக்களுக்கு மதவழிபாட்டு உரிமையை மறுப்பதுபோல் உள்ளது. தற்போது போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக கலெக்டர் மற்றும் சப்-கலெக்டரிடம் அனுமதி வாங்கி விட்டு கொண்டாட முடியும் என கூறியுள்ளனர்.

    இதனால் அடிதட்டு மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விழாவை எளிதாகவும், கட்டுப்பாடு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×