search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu high school"

    • மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டு நவீன பசுமை கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்
    • பள்ளி வளாகத்தில் மர கன்றுகளையும் நட்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான நவீன பசுமை கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் டாக்டர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டு நவீன பசுமை கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி வளாகத்தில் மர கன்றுகளையும் நட்டனர். நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தர ராஜன், இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்து மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    ×