என் மலர்
நீங்கள் தேடியது "Helicopter ride"
- ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.
- ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோவளம்:
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி திருநாளில் ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது.
பின்னர் திடீரென ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி நிறத்தப்பட்டது.
மீண்டும் நேற்று ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி தொடங்கியது. நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களும், மீண்டும் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் 6 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி நடக்கிறது. நேற்று ஆன்லைனில் ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்தவர்கள் பலர் ஆா்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர். ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.
முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்கள் ஹெலிகாப்டர் சவாரி கோவளம் ஹெலிபேடில் வந்து காத்திருந்தனர். ஆனால் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து சரியான சிக்னல் கிடைக்காததால் பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் உல்லாசமாக ஹெலிகாப்டர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
முன்னதாக ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
- பொதுத் தேர்வில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்படுவர்.
- மேலும் பரிசுத் தொகையும், லேப்டாப்பும் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல் மந்திரி அறிவித்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் முதல் மந்த்ரிரி பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் முதல் மந்திரி.
இதற்கிடையே, ராஜ்பூர் சட்டசபை தொகுதியில் பேசிய முதல் மந்திரி பூபேஷ் பாகெல், நான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை பார்த்ததும் இங்குள்ள குழந்தைகள் ஆர்ப்பரித்ததை கண்டேன். உயர பறப்பது என்றால் குழந்தைகளுக்கு என்றுமே உற்சாகம்தான். சாதனை செய்யும் மாணவர்களுக்கு தனித்துவமான பரிசு தரப்படும் என்று கூறினால், அவர்கள் அதிக உத்வேகத்துடன் முயற்சி செய்வர். எனவே 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவர் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைநகர் ராய்ப்பூரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து மாநில அளவில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.அவர்களுக்கு பரிசுத்தொகையும் லேப்டாப்பும் வழங்கப்பட்டது.
பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கவுரவித்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.






