என் மலர்
நீங்கள் தேடியது "He suddenly fainted near the small bridge and fell down"
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த உமையாள்புரத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 37). விவசாயி. இவரது மனைவி நவநீதம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வடிவேலு கடந்த 5-ந் தேதி வெம்பாக்கம் பகுதிக்கு வேலை சம்பந்தமாக சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது சிறுபாலம் அருகே திடீரென மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட அவரது உறவினர் வடிவேலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வடிவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






