என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He stumbled and fell down"

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • v

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் விஜயகு மார் (வயது 36). இவர் விளாப்பாக்கத்தில் உள்ள மின்சார வாரியத் தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்று விட்டு இரவு ராணிப்பேட்டை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    ரத்தினகிரியை அடுத்த அரப் பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி விஜயகுமார் ஓட்டி வந்த மோட் டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழேவிழுந்தார். பலத்த காயம் அடைந்து விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×