என் மலர்
நீங்கள் தேடியது "has been exceptionally talented and active."
- சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்
- மாதர் சங்கத்தினர் சிறுமிக்கு பாராட்டு
ஆரணி :
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் மணிகண்டன் பல் மருத்துவர் சவிதா தம்பதியினருக்கு தீஷ்ணா (3) ஸ்வதிக்கா 11 மாத கைக்குழந்தை உள்ளது.
மணிகண்டன் சவிதா தம்பதியினர் தன்னுடைய தாய் முருவாம்பாளுடன் ஓரே குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இதில் 3 வயது சிறுமி தீஷ்ணா தனி திறமையுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்துள்ளார்.
சுமார் 76 விலங்குகள் 30 பறவைகள் உள்ளிட்ட 120 விலங்குகளை 1 நிமிடம் 14 விநாடிகளிலும் 51 மருந்து உபகரணங்கள் 2 நிமிடத்தில் டிவி மற்றும் லேப்டாப்பில் பார்த்து சரளமாக சொல்லி அசத்தி வருகின்றார்.
இதனை கலாம் வேல்டு ரெக்கார்டு மற்றும் இண்டியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டு ஆகிய நிறுவனங்கள் சிறுமி தீஷ்னாவின் இந்த செயலை கண்டு வியப்படைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க பதிவு செய்து 3 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது வழங்கி கவுரவித்தனர்.
இந்த விருதை பெற்ற தீஷ்னாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் மிகழ்ச்சியடைந்து ள்ளதாகவும் எங்கள் குடும்பத்திற்கு பெருமைசேர்த்து ள்ளாகதாவும் என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர்.
இன்னும் பள்ளி படிப்பை ஆரம்பிக்காமலேயே விலங்குகள் மற்றும் மருந்து
உபகரணங்கள் பெயரை சரளமாக சொல்லி அசத்தும் சிறுமி வருங்காலத்தில் உயரிய பதவிக்கு வரவேண்டும் என்றும் மேலும் பல உலக சாதனைகளை படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மாதர் சங்கத்தினர் சிறுமிக்கு பாராட்டுகள் தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.






