என் மலர்
நீங்கள் தேடியது "Hall Ticket Distribution"
- பொதுத்தேர்வு 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்க உள்ளது
- www.dge1.gov.in எனும் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது
வேலூர்:
பிளஸ்-2 வகுப்புக்கு வரும் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3 ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு தேர்வுகள் துறை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், www.dge1.gov.in எனும் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
எனவே, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்கள் பள்ளியின் ரகசிய குறியீடு மற்றும் பதிவெண்ணை பயன்ப டுத்தி, மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு, மாணவர்கள் விவரங்கள் அடங்கிய முகப்புத்தாள் (டாப் ஷீட்) அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக தேர்வு மையங்க ளுக்கு வழங்கப்பட்டது.
இதில், சேதமடைந்த முகப்புத்தாள், பாடத்தொ குப்பு எண் மாற்றம் அடைந்த முகப்புத்தாள் மற்றும் முகப் புத்தாள் பெறப்படாத நிலை ஆகிய காரணங்கள் இருந் தால், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் இணையதளம் வழியாக முகப்புத் தாள்களை வரும் 8-ந் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அரசு தெரிவித்துள்ளது.
இது தவிர, மாணவர் பெயர் பட்டியலில் பதிவுகள் சரியாக இருந்து, தேர்வு மையங்களுக்கு வழங்கப் பட்ட முகப்புத்தாள்களில் தேர்வரின் பெயர், பயிற்று மொழி தவறாக இருப்பின், சிவப்பு நிற மையால் திருத் தம் செய்து முதன்மைக் கண் காணிப்பாளர்கள் கையொப் பம் இடவேண்டும்.
மாணவர்களின் புகைப் படம் மாறியிருந்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் சரி யான புகைப்படத்தை ஒட்டி, அங்கு முதன்மைக் கண்கா ணிப்பாளர்கள் கையொப்பம் இடவேண்டும் என தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.






