என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "GST Compensation"
- உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு ரூ.1188 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திற்கு அதிகபட்சமாக 2081 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1915 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி, உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
'2022-2023ம் நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த ஆண்டு மார்ச் இறுதி வரை வசூலிக்கப்படும் மொத்த செஸ் தொகையையும் முன்கூட்டியே விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வரையிலான மொத்த செஸ் வசூல் ரூ.72,147 கோடியாக இருந்தபோதிலும், மீதமுள்ள ரூ.43,515 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவிக்கிறது' என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்