என் மலர்
நீங்கள் தேடியது "Group-2 Exam Result"
- இதன்படி குரூப்-2 முதல் நிலை தகுதி தேர்வு முடிவு இந்த மாதமும், குரூப்-4 தேர்வு முடிவு வருகிற டிசம்பர் மாதமும் வெளியிடப்படும்.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு உத்தேச அறிக்கை வெளியீடு
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியா–ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வுகள் நடத்தி, காலியாக உள்ள அரசு பணியிடங்களில் தேர்வர்களை நியமனம் செய்கிறது.
அந்த வகையில் போட்டி தேர்வுகளின் முடிவு எப்போது வெளியிடப்படும் என்ற உத்தேச அறிக்கையை ஒவ்ெவாரு மாதமும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி டி.என்.பி.எஸ்.சி . நடத்தி உள்ள 12 வகை போட்டி தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேச விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி குரூப்-2 முதல் நிலை தகுதி தேர்வு முடிவு இந்த மாதமும், குரூப்-4 தேர்வு முடிவு வருகிற டிசம்பர் மாதமும் வெளியிடப்படும். உதவி குற்றவியல் வக்கீல் பதவிக்கான தேர்வு, என்ஜினீயரிங் பதவிக்கான தேர்வு ஆகியவற்றின் முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளை சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமானோர் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.