search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green way road Land Measurement"

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு 2-வது நாளாக நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

    செங்கல்பட்டு:

    சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்கள் வழியாக இச்சாலை செல்கிறது. இதற்காக சுமார் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. படப்பை கரசங்கால், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், வளையங்கரணை பகுதியில் 12.4 கிலோ மீடடர் தூரத்துக்கு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடை பெற்றது. செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர், பாலூர், கொளத்தாஞ்சேரி பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் முத்துவடி வேலு, தாசில்தார் ரமா மற்றும் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் நட்டினர். அப்பகுதியில் 19 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதையொட்டி அங்கு டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கிராமங்கள் வழியாக சுமார் 59 கிலோ மீட்டர் செல்வது குறிப்பிடத்தக்கது. #Greenwayroad

    ×