search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Environment"

    • கிராமங்கள் தோறும் பசுமை சூழல் நிலவ வேண்டும்.
    • கோவில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சங்கர் தலைமையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு இளநிலை உதவி ஆய்வாளர் பழனிவேல் கலந்துகொண்டார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களான சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும். கிராமங்கள் தோறும் பசுமை சூழல் நிலவ வேண்டும். பொது இடத்தில் மலம் கழிக்கக்கூடாது. கோயில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    ×