என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt job competitive exam"

    • போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர் கற்றல் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கல்வித்தொலைக்காட்சி வாயிலாக நிகழ்ச்சிகள் காலை 7மணி முதல 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு மாலை 7 மணி முதல 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    அரியலூர் :

    மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர் கற்றல் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்விணையதளத்தில் மத்திய மாநில அரசு பணிகள் மற்றும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. ஆத்துடன் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக நிகழ்ச்சிகள் காலை 7மணி முதல 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு மாலை 7 மணி முதல 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐ.பி.பி.எஸ். தேர்வு மற்றும் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார் ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 27.07.2022 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட இருக்கிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொள்ளலாம்.

    எனவே அரியலூர் மாவட்டத்தினைச் சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×