என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Govt Bus Clash"
- குருசாமி என்பவரது மகன் ரூபானந்தன் (வயது 28) ஓட்டிக்கொண்டு சென்றார்.
- அரசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பனியன் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் பணிபுரியும் வேலை ஆட்களை ஏற்றிக்கொண்டு ஊத்துக்குளி பாப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ரூபானந்தன் (வயது 28) ஓட்டிக்கொண்டு சென்றார். செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே ரோட்டில் பஸ்சுக்கு முன்னால் கரூர் மாவட்டம் உடையாரட்டியை சேர்ந்த அரசன் என்பவரது மகன் முனியப்பன் (வயது 41) மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர், தனக்கு முன்னால் சென்ற ஒரு லாரியை முந்தி செல்ல முயற்சித்து எந்தவித சிக்னலும் இல்லாத இடத்தில் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக தெரிகிறது . ரூபானந்தன் லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பஸ்சிற்கு பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பனியன் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பனியன் நிறுவன பஸ் அருகே வந்த கார் மீது உரசி இடதுபுறம் உள்ள சாலையில் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரூபானந்தனுக்கு முதுகு, மார்பு மற்றும் இரண்டு கால்களில் பலத்த காயங்களும், பஸ்சில் பயணித்த 21 பேருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. அரசு பஸ்சில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக எந்தவித காயமும் இன்றி தப்பினர் . இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்