என் மலர்
நீங்கள் தேடியது "Governor Tamilzhisai Information"
- சென்னையில் இருந்து வரும் சொகுசு கப்பலுக்கு புதுவை அரசின் அனுமதி இல்லை என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
- புதுவை என்.சி.சி. தலைமையகத்தின் சார்பில் என்.சி.சி மாணவ, மாணவி களின் கடல்சாகச பயணம் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை என்.சி.சி. தலைமையகத்தின் சார்பில் என்.சி.சி மாணவ, மாணவி களின் கடல்சாகச பயணம் தொடங்கியது.
புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 35 மாணவர்கள், 25 மாணவிகள் கடல்வழியாக காரைக்காலுக்கு சென்று திரும்புகின்றனர். கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக பாய்மர படகில் மாணவர்கள் பயணிக்க உள்ளனர்.
சாகச பயணத்தில் ஈடுபடும் மாணவிகள் செல்லும் இடங்களில் ரத்ததானம், கடற்கரை சுத்தம், மரம் நடுதல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த பாய்மர கடல்சாகச பயணத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களின் பயணத்தை கவர்னர் தமிழிசை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
மாணவிகள் இந்த பயணத்தில் பங்கேற்பது மிகவும் சவாலானது. இந்த பயணம் அவர்களுக்கு ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். இதற்காக ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பயிற்சியளித்த, பயணத்தை ஏற்பாடு செய்த என்.சி.சி. அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
75-ம் ஆண்டு சுதந்திர ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களோடு படகு பயணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளேன். புதுவையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக இந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்பறப்படுத்தி வருகிறோம்.
உலக சுற்றுச்சூழல் கொண்டாடும் வேளையில் பிளாஸ்டிக் இல்லாத உலகமே வரும்கால சந்ததிக்கு நாம் அளிக்கும் பரிசாக இருக்கும். இந்த மாணவர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
துறைமுக வளாகத்துக்கு வந்த போது மீனவர்கள், முகத்துவாரம் தூர்வாரப்படவில்லை என கூறினர். இதுகுறித்து முதல்-அமைச்சர், அமைச்சர், அதிகாரிகளோடு கலந்துபேசி தேவையான நடவடிக்கை எடுப்போம். மீனவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காரைக்கால் அம்மையார் கோவில் விழாவில் பங்கேற்க செல்ல உள்ளேன். அப்போது
அரசு மருத்துவமனை, வளர்ச்சி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படாது.
ஏற்கனவே காரைக்கால் மாவட்ட அதிகாரிகளை அழைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்துள்ளேன். அவற்றினை தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளேன். கொரோனா 2-வது அலையின்போது புதுவையில் கவர்னர் ஆட்சி இருந்தது. அப்போது புதுவை மாடல் என உருவாகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.
இதனால் கொரோனா 2-வது அலையை முற்றிலுமாக தடுக்க முடிந்தது. தொடர்ந்து கொரோனா பரவலை கண்காணித்து வருகிறோம். புதிதாக வைரஸ் இருப்பதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டால் தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு உள்ளோம்.
தமிழகத்திலிருந்து புதுவைக்கு வரும் சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அதுதொடர்பான எந்த கோப்பும் என்னிடம் வரவில்லை. சொகுசு கப்பல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதேநேரத்தில் வருமானம் வரும் என்பதற்காக இளைஞர்களையோ, மக்களையோ பாதிக்கும் கலாச்சார சீர்கேடான சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






