என் மலர்
நீங்கள் தேடியது "Government school blockade"
- பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.
- ஒரு மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக நடக்க முயற்சித்த தாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஓ.சவுதாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
ஆசிரியர் ஒருவர் செல்போன் மூலம் சமூக அறிவியல் பாடத்தில் வரை படங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்துள்ளார். அப்போது ஒரு மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக நடக்க முயற்சித்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி வகுப்பறையில் அழுததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவி யரிடம் விசாரித்தார். இந்த சம்பவம் குறித்து மாணவி அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று அந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி, மாணவியின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதைய டுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிர மணியம் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி னார். இதுகுறித்து பள்ளி யின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு இறுதி தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திய போது, ஆசிரியர் தவறி மாணவி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. அதை சக மாணவிகள் பார்த்து கேலி செய்ததால் மாணவி அழுதுள்ளார். இது பற்றி மாணவி பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் எதேச்சையாக நடந்தது என்றும், தவறான எண்ணத்தில் நடக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






