என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold grant to Thali"

    • மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் வினோலியா முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் துர்காதேவி வரவேற்று பேசினார்.

    பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:-

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டமானது, உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர ஈ.வே.ரா. மணியம்மை நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் மொத்தம் 195 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் பட்டம் படித்த பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், பட்டப்படிப்பு படிக்காத பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மொத்தம் ரூ.85 ஆயிரத்து 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் முதன் முதலில் 8-ம் வகுப்பு படித்த பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.

    பின்னர் பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் படிப்படியாக திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. தற்போது பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் தீட்டப்பட்டு மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அரசு பெண்களுக்காக பல உரிமைகளை வழங்கி யுள்ளது சொத்துரிமை குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் அவர்க ளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பணியில் கூட 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இந்தத் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×