search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl Child Day"

    • அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாக பெண்கள் உள்ளனர்.
    • செல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தேவையில்லாதவற்றை தவிர்த்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வட்ட சட்டபணிகள் குழு சார்பில்,விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். வக்கீல்கள் வெங்கடாசலம், கோபாலகிருஷ்ணன், சுதாகர்,மீனா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்டு நீதிபதி சித்ரா பேசியதாவது:- முன்பு பெண் குழந்தைகள் பாரமாக கருதிய காலம் இருந்தது. பெண் என்பவள் இன்னொரு வீட்டுக்கு செல்பவள் தானே என படிக்க அனுமதிக்காத காலம் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாக பெண்கள் உள்ளனர்.

    படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு நீங்கள் முன்னேற வேண்டும். செல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தேவையில்லாதவற்றை தவிர்த்திட வேண்டும்.

    பெண்களை நாட்டின் கண்கள் என்ற கருத்துக்கு ஏற்ப படிப்பில் மட்டுமன்றி குடும்ப வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் நல்ல பெயர் பெற்று நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×