search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gilr missing"

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பச்சிளம் குழந்தையை, நர்சிடம் கொடுத்து விட்டு பெண் மாயமான சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணி புரிபவர் கெஜலட்சுமி.

    இவர் இன்று காலை 6.30 மணியளவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் ஒரு பெண் அங்கே வந்தார்.

    ஆனால் கெஜலட்சுமியுடன் சிறது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “ இந்த குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளுங்கள் கழிவறைக்கு போய்விட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லி குழந்தையை அவரிடம் கொடுத்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த நர்சு கெஜலட்சுமி குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்குள்ள குழந்தைகள் வார்டு சிறப்பு சிகிச்சை பிரிவில் குழந்தையை சேர்த்தார்.

    இது குறித்து, காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை கொடுத்து விட்டு மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×