என் மலர்
நீங்கள் தேடியது "Get e-certificate"
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை 100 சதவீதம் சரியானதாக ஆக்கவும், போலியான விவரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இப்பணிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு ஆன்-லைனில் இணைய தள வாயிலாக இ-சர்டிபிகேட் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ- மாணவிகளை ஊக்குவித்து இ-சர்டிபிகேட் பெற வைக்க கல்லூரி முதல்வர்கள் முன் வர வேண்டும்.
அதேபோல் வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து இ-சர்டிபிகேட் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.






