search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gareth SouthGate"

    இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளருக்கு 5 மில்லியன் பவுண்டு சம்பளம் வழங்க இருப்பதை பெண்கள் நெட்பால் பயிற்சியாளர் விமர்சித்துள்ளார். #GarethSouthgate
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியது. அரையிறுதியில் குரோசியாவிடம் தோல்வியடைந்தது.

    கால்பந்து தொடர் தொடங்கும்போது இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என யாரும் கணிக்கவில்லை. ஆனால் அரையிறுதி வரை முன்னேறியது. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் காரேத் சவுத்கேட் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.



    அவர் பணியை பாராட்டி ஆண்டு வருமானத்தை 5 மில்லியன் பவுண்டாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பெண்கள் நெட்பால் அணி பயிற்சியாளருக்கு குறைந்த சம்பளமும், முன்னணி அணிகளை வெல்ல முடியாத இங்கிலாந்து அணியின் பயிற்சியருக்கு அதிக சம்பளம் கொடுப்பதை நெட்பால் பயிற்சியாளர் டிராகெய் நெவில் விமர்சனம் செய்துள்ளார்.

    நெவில் மாதத்திற்கு 742 பவுண்டுகள்தான் சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
    பெல்ஜியத்திற்கு எதிராக ஹாரி கேனை இறக்கியிருந்தால் அபத்தமானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக்கில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்திருந்த பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் காலிறுதி, அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து 8 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    இங்கிலாந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்காக கடைசி 10 நிமிடத்தில் ஹாரி கேனை களம் இறக்கியிருக்க வேண்டும் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான காரேத் சவுத்கேட், ஹாரி கேனை களம் இறக்காதது சரியான முடிவே என்று கூறியுள்ளார். இதுகுறித்து காரேத் சவுத்கேட் கூறுகையில் ‘‘10 நிமிடத்திற்காக ஹாரி கேனை நாங்கள் களம் இறக்கியிருந்தால், யாராவது ஒருவர் அவரது முழங்காலை தாக்குவதற்கான சம்பவம் நடைபெற்றிருக்கும். அப்படி நடந்திருந்தால் அது அபத்தமானதாக இருந்திருக்கும். நாக்அவுட் சுற்று மிகவும் முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.



    லீக் சுற்றின் போது உடற்தகுதியில் சிறப்பான அளவில் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அடுத்த வாரத்தில் என்ன நடந்தாலும் அது சரியான முடிவாக இருக்கும். நாம் வெற்றி பெற்றிருந்தால்தான் சரியான முடிவாக இருந்திருக்கும் என்று மக்கள் கூறலாம். ஆனால், வரும் போட்டிகளில் எக்ஸ்ட்ரா நேரம் வரை போட்டி போகலாம். அதனால் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை’’ என்றார்.
    ×