என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "GANTHI STATUE INAUGURATION"
- அரியலூர் செட்டி ஏரிக்கரை பூங்கா திடலில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
- மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் செட்டிஏரிக்கரை பூங்காத்திடலில் மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சாெ.க.கண்ணன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. அரியலூர் ஒன்றிய செயலாளர் சங்கர், திருமானூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசு
மற்றும் தி..க, தி.மு.க., காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியினர், எம்.ஜி.ஆர். கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, மாவட்ட வளர்ச்சி குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார், விழா முடிவில் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்