என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi consultation"

    • பாதுகாப்பு பணிகள் ஆய்வு
    • அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது‌. விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது.

    இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள், டி.எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    ×