என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gambling gang arrested 19 people"

    • ரூ.3.50 லட்சம், 5 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரியார் நகரில் காசு வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை குடியாத்தம் டவுன் பெரியார் நகர் 3-வது தெருவில் சூதாட்டம் நடந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு காசு வைத்து சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.

    கும்பலில் இருந்த 19 பேரை கைது ெசய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் பணம், 5 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சூதாட்ட கும்பல் அப்பகுதியில் எப்போதில் இருந்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த சூதாட்ட கும்பல் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×