search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign woman"

    வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி செக்ஸ் சித்ரவதை செய்த சென்னை தொழில் அதிபர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    பாங்காக்கை சேர்ந்தவர் நருமோன் ஜபாய் (26). இவர் அங்கு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடன் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஜெயின் (43) என்ற தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஜெயின் பாங்காக் சென்றிருந்த போது இருவரும் சந்தித்து கொண்டனர். இதன் பிறகு 2 பேரும் பழகினர். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெயின் ஜபாயை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே ஜபாய் 2 குழந்தைகளுக்கு தாய் ஆனார். இருவரும் பாங்காக்கில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இதில் ஜெயினின் நண்பர் சந்தோசும் கையெழுத்திட்டுள்ளார்.

    இதன் பின்னர் ஜெயின், ஜபாயுடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் செக்ஸ் சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது.

    இதுபற்றி ஜபாய் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினார். தாய்லாந்து தூதரகத்தின் உதவியையும் நாடினார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜபாயின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சவுகார்பேட்டை சேர்ந்த ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் கோத்தாரி என்பவர் மீதும் ஜபாய் செக்ஸ் குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அவரும் கைதானார்.

    இதற்கிடையே தனது 2 குழந்தைகளுக்கும் ஜெயின்தான் தந்தை என்று ஜபாய் கூறி உள்ளார். இது தொடர்பாக ஜெயினுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஜெயினின் இன்னொரு நண்பரான சந்தோசை போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×