என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Flowers rate hike"
- முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது
- தொடர் முகூர்த்தம் மற்றும் கோவில் திருவிழாக்களால் வாழை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் :
தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.300க்கு விற்பனையான மல்லிகை பூ தற்பொழுது ரூ.1300-க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செம்பட்டி, ஆத்தூர், நரசிங்கபுரம், தாடிக்கொம்பு, சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து கரூர், சேலம், நாமக்கல்,சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் ஆந்திரா,கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முகூர்த்த தினங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து விற்பனையாகி வந்தது.
தற்பொழுது தொடர்ந்து 5 நாட்கள் வரும் முகூர்த்த நாட்கள் வருவதால் நேற்று ரூ.300-க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது ரூ.1,500-ம், ரூ.200-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்கப்பட்டது.
மேலும் ரூ.250-க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.100, அரளிப்பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர் முகூர்த்தத்தின் காரணமாக நேற்றைவிட இன்று பூக்களின் விலை 5 மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருவதால் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் தொடர் முகூர்த்தம் மற்றும் கோவில் திருவிழாக்களால் வாழை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வாழை இலை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்