என் மலர்
நீங்கள் தேடியது "Flood Warning Villagers"
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகத்துடன் காவிரி ஆற்றில் வர இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மேட்டூர் அணைக்கு தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி முதல்-அமைச்சர் பழனிசாமியே நாளை மேட்டூர் வந்து அணையை திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முதன்முதலில் சேலம் மாவட்டம் பெரும்பள்ளம், சின்னபள்ளத்தை தாண்டி ஈரோடு மாவட்ட நுழைவு பகுதியான நெரிஞ்சிப்பேட்டைக்கு வருகிறது.
பிறகு அங்கிருந்து அம்மாபேட்டை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம் வழியாக பவானி வந்து பவானி கூடுதுறையில் பவானி ஆற்றுடன் சங்கமித்து ஈரோட்டுக்கு காவிரி தண்ணீர் பாய்ந்து வருகிறது.
பிறகு ஈரோட்டில் இருந்து கொடுமுடி, கரூர், குளித்தலை, முசிறி வழியாக திருச்சிக்கு செல்கிறது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகத்துடன் காவிரி ஆற்றில் வர இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவரி கரையோரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும். ஆகவே நாளை ஆற்றில் குளிக்கும் பொதுமக்களும் கரையோரப்பகுதியில் அமர்ந்து துணிகளை சலவை செய்வோர்களும் கவனமாக இருக்க வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கும் இளைஞர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு வந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி சார்பில் பணியாளர்கள் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள்.
மேட்டூர் அணையிலிருந்த தண்ணீர் திறக்கப்படும் தேதியை முதல்வர் அறிவித்த முதல் ஈரோடு மாவட்ட காவிரி கரை பகுதியில் உள்ள புல்-பூண்டுகளையும் அந்தந்த பகுதி உள்ளாட்சி பணியாளர்கள் வெட்டி அகற்றி வருகிறார்கள்.
ஈரோடு மாநகராட்சி பகுதியிலும் காவிரிகரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பையும் புதர்களையும் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மேட்டூர் அணைக்கு தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி முதல்-அமைச்சர் பழனிசாமியே நாளை மேட்டூர் வந்து அணையை திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முதன்முதலில் சேலம் மாவட்டம் பெரும்பள்ளம், சின்னபள்ளத்தை தாண்டி ஈரோடு மாவட்ட நுழைவு பகுதியான நெரிஞ்சிப்பேட்டைக்கு வருகிறது.
பிறகு அங்கிருந்து அம்மாபேட்டை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம் வழியாக பவானி வந்து பவானி கூடுதுறையில் பவானி ஆற்றுடன் சங்கமித்து ஈரோட்டுக்கு காவிரி தண்ணீர் பாய்ந்து வருகிறது.
பிறகு ஈரோட்டில் இருந்து கொடுமுடி, கரூர், குளித்தலை, முசிறி வழியாக திருச்சிக்கு செல்கிறது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகத்துடன் காவிரி ஆற்றில் வர இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவரி கரையோரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும். ஆகவே நாளை ஆற்றில் குளிக்கும் பொதுமக்களும் கரையோரப்பகுதியில் அமர்ந்து துணிகளை சலவை செய்வோர்களும் கவனமாக இருக்க வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கும் இளைஞர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு வந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி சார்பில் பணியாளர்கள் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள்.
மேட்டூர் அணையிலிருந்த தண்ணீர் திறக்கப்படும் தேதியை முதல்வர் அறிவித்த முதல் ஈரோடு மாவட்ட காவிரி கரை பகுதியில் உள்ள புல்-பூண்டுகளையும் அந்தந்த பகுதி உள்ளாட்சி பணியாளர்கள் வெட்டி அகற்றி வருகிறார்கள்.
ஈரோடு மாநகராட்சி பகுதியிலும் காவிரிகரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பையும் புதர்களையும் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள்.






