search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood In Nellai Kanyakumari"

    நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. #Expresstrains #Flood
    நெல்லை:

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

    நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.



    இதனால் நெல்லை-குமரி மாவட்டங்களில் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை - நாகர்கேவில் (56718) பயணிகள் ரெயில், செங்கோட்டை - கொல்லம் (56335/56336) பயணிகள் ரெயில், புனலூர் - கொல்லம் - புனலூர் ரெயில், கொல்லம் - புனலூர்-கொல்லம் ரெயில், புனலூர் - கன்னியாகுமரி, புனலூர் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டன.

    மதுரை கோட்டத்தில் செங்கோட்டை- புனலூர் இடையே மண்சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் கொல்லம்- செங்கோட்டை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    புனலூரில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 56365/ 56366) போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையிலான சேவை இருமார்க்கங்களிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லை - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம் வரை இயக்கப்படுகின்றன.

    திருவனந்தபுரம் கோட்டத்தில் கனமழை காரணமாக அங்கமாலி, ஆலுவா பாலங்களில் வெள்ள நீர் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோரனூர்- எர்ணாகுளம் பயணிகள் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

    நேற்று புறப்பட்ட சென்னை - திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாலக்காடு வரை மட்டுமே செல்லும்.

    இதேபோல் இன்று புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், எர்ணா குளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    14-ந்தேதி புறப்பட்ட மும்பை - கன்னியாகுமரி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதேபோல் கே.எஸ்.ஆர். பெங்களூர் - கன்னியாகுமர் எக்ஸ்பிரஸ் சேலம், நாமக்கல், திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். #Expresstrains #Flood

    ×