search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flint toy"

    • அகழாய்வில் வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது.
    • கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் அவ்வப்போது பல்வேறு பொருட்கள் கிடைத்த நிலையில் இதற்கு முன்பு சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணியப்பட்ட பதக்கம், புகைக்கும் குழாய், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தங்க அணிகலன் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறிப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பழங்காலத்தில் பண்டைய கால மக்கள் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் நுனுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய சுடு மண்ணால் செய்யப்பட்ட அழகிய ஆண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. இது அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொம்மையின் தலை கிடைக்கவில்லை. இங்கு நடக்கும் அகழாய்வு பணியின் போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது.

    இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த பொருட்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருட்கள் கண்டறியப் படுவது இந்த பகுதியின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    ×