search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishing work"

    குளச்சல் கடல் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் 5 நாட்களாக வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது. குளச்சல் பகுதியில் கடந்த 5 நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. குளச்சல் கடல் பகுதியில் பலமான காற்றும் வீசுகிறது. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.

    ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகளும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    கடலுக்கு செல்லாத கட்டு கட்டுமரங்களும் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று 5-வது நாளாக குளச்சலில் மீன்வரத்து பாதிக்கப்பட்டது.

    மீன் வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.





    ×