என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire in forest area"

    • மரங்கள் எரிந்து நாசம்
    • கண்காணிப்பு பணி தீவிரம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குளித்திகை பகுதியில் சாணாங்குப்பம காப்புக் காடுகள் உள்ளன.

    இந்த வனப் பகுதியில் கூளியம்மன் கோயில் வழிச்சாரகம் காட்டுப் பகுதியில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் திடீரென வனப்பகுதியில் தீ பிடித்து எரிந்தது.

    பின்னர் வனப் பகுதியில் மளமளவென தீ பரவியது.இது குறித்து பொதுமக்கள் ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்டில் தீ பரவிய பகுதிக்கு ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர் சம்பத்குமார் வனக் காப்பாளர்கள் செந்தில் நல்லதம்பி பால்ராஜ் முனிசாமி ஆகியோர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் இன்று காலை வரை 2 நாள் போராட்டத்துக்கு பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மீண்டும் வனப் பகுதியில் தீ பரவாமல் தடுக்க வனத் துறையினர் தற்போது அங்கேயே முகாமிட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×