search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financial institution Scam"

    • சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    சென்னை:

    ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

    சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதனை உண்மை என்று நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் பறிபோனது.

    இந்நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.கே.சுரேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    தற்போது ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருக்கிறார். அவர் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம் 21 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது.
    • வங்கி கணக்கில் இருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது அவர்களுடை ஆசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பீடுகளுக்கு மாத வட்டியாக 25 சதவீத முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களி டம் இருந்து சுமார் 2438 கோடி முதலீடு பெற்றுள்ளது.

    மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம் 21 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது.

    இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் பேச்சிமுத்து ராஜா அய்யப்பன் ரூசோ ஹாரிஸ் மாலாதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனார்.

    வெளி நாடுகளுக்கு தப்பி சென்றவர்களை பிடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடியும் தங்கம் வெள்ளி பொருட் கள் 1.13 கோடி மதிப்பு கைப்பற்றி உள்ளனர்.

    வங்கி கணக்கில் இருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது அவர்களுடை ஆசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது.

    ஹிஜாவு நிறுவனம் தொடங்கி 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து 4400 கோடி வரை டெபாசிட்டுகள் பெற்று மாதம் தோறும் வட்டி மற்றும் தொகையை திருப்பி செலுத்தவில்லை இதனு டைய 19 துணை நிறுவ னங்கள் மேலாண்மை இயக்குநர்கள் கமிட்டி உறுப்பினர் என 52 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டு உள்ளது. இதில் நேரு, குருமணி கண்டன், முகம்மது, ஷெரிப், சாந்தி, பால முருகன், கல்யாணி, சுஜாதா, பாலாஜி, பாரதி, ரவிச்சந்திரன், சுஜாதா அலெக்சாண்டர் மகா லட்சுமி ஆகியோர் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் 162 வங்கி கணக்குகளில் உள்ள ரூ.14.47 கோடி முடக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியிடம் சுமார் ரூ.45 கோடி மதிப்பு உள்ள அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    எல்.என்.எஸ். நிறுவனத்தை தொடங்கி 84 ஆயிரம் நபர்களிடம் இருந்து சுமார் 5900 கோடி முதலீடி பெற்று ஏமாற்றி உள்ளனார்.

    இதனுடைய மற்றும் 5 துணை நிறுவனங்களில் மொத்தம் 19 பேர் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டு அதில் 3 பேரை கைது செய்து உள்ளனர்.

    குற்றவாளிகள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து 1.12 கோடியும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் 34 லட்சம் 16 கார்கள் குற்றவாளிகள் சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அனைத்து எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் இன்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசையம்மாள் தலைமையில் நடந்தது. இதில் ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., ஐ.எஸ்.ஐ. நிதி நிறுவன வழக்கை விசாரிக்க 30 பேர் கொண்ட 30 தனிப்படை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ×