என் மலர்
நீங்கள் தேடியது "Festivals were held for rivers"
- பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
வேலூர்:
நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி வேலூரில் கடந்த புதன்கிழமை பாலாற்று பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு பெருவிழா நிறைவடைந்தது. இதையொட்டி, பாலாற்றுக்கு மகா தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில், நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகத்தில் ஏற்கெனவே காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், ஸ்ரீபு ரம் நாராயணி பீடம் ஆகியவற்றின் சார்பில் பாலாற்றுப் பெருவிழா வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் புதன்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடை பெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார்.
மூன்றாம் நாள் நிகழ்வில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து நாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தலைமையில் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில் காலை யாக நிகழ்ச் சிகளும், மாலையில் பாலாற்றுக்கு ஆரத்தி நிகழ்வும் நடைபெற்றன.
அத்துடன், முதல் நாள் நிகழ்வில் தேசிய அளவில் உள்ள சந்நியாசிகள் பங்கேற்கும் மாநாடு, 2 ஆம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் துறவிகள், ஆதீனங்கள் பங்கேற்கும் மாநாடும், 3-ம் நாள் நிகழ்வில்பெண் துறவிகள் பங்கேற்கும் மாநாடும், 4-ஆம் நாள் நிகழ்வில் பசு, நீர் நிலைகள் பாதுகாப்பு மாநாடும், 5– ஆம் நாளானஞாயிற்றுக்கிழமை கிராம கோயில் பூசாரிகள் பங்கேற்கும் மாநாடும் நடைபெற்றன.
கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த பாலாறு நதி பெருவிழா நேற்று இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது.
இதையொட்டி, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்றில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றன. தொடர்ந்துநாட்டிலுள்ள பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த புனித நீரைப் பாலாற்றில் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்களும் பாலாற்றில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதையடுத்து, பாலாறு அன்னைக்கு மகா தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாரணாசியில் நடைபெறுவதைபோல் பாலாற்றை நோக்கி ஒரே நேரத்தில் மகா தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






